வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை...

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு  ஆலோசனை...

தமிழகத்தில் அக்டோபர் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதனை எதிர்கொள்வது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், டி. ஜி.பி சைலேந்திரபாபு, தீயணைப்பு டி. ஜி.பி கரன் சின்கா, வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் குறித்தும், மாநகர பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கா வண்ணம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.