அக்னிபத் எனும் தேசநலனுக்கு எதிரான திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் - மத்திய அரசுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்!!

அக்னிபத் எனும் தேசநலனுக்கு எதிரான திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் - மத்திய அரசுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்!!

அக்னிபாத் எனும் தேசநலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ராணுவத்தில் ஒப்பந்த முறையில் ஆள் சேர்க்கும் பாஜக அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு, எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டங்களை நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சிகள் தவிர, பல முன்னாள் ராணுவ அதிகாரிகளும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அக்னிபாத் தேர்வு திட்டம் ஆபத்தானது என ராணுவ அதிகாரிகள் தெரிவிப்பதாக குறிப்பிட்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், நாட்டின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, இளைஞர்களின் லட்சியத்தை சிதைக்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.