3-ம் ஆண்டு நினைவுதினம்: கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

3-ம் ஆண்டு நினைவுதினம்: கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 7-ம் தேதி காலமானார். இந்நிலையில் அவரது 3-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இதனை தொடர்ந்து சென்னை சி.ஐ.டி காலனியில் உள்ள இல்லத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் ராஜாத்தியம்மாள் மற்றும் திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து, கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.