சென்னை: உணவு டெலிவரி செய்யும் ஊழியர் சரமாரியாக வெட்டிக்கொலை

சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியரை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை: உணவு டெலிவரி செய்யும் ஊழியர் சரமாரியாக வெட்டிக்கொலை

சென்னை காமராஜர் சாலையில் உள்ள நடுகுப்பத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 சென்னை காமராஜர் சாலையில் உள்ள நடுகுப்பம் 3வது தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் அஜித் குமார் (வயது 24). இவர் சோமடோ டெலிவரி பாயாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் பணியை முடித்துவிட்டு நடுப்பக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். பின்னர் இருசக்கர வாகனத்தை தந்து வீட்டின் வாசலில் நிறுத்தும்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி தப்பித்து உள்ளனர். தலையில் வெட்டு காயங்களுடன் துடிதுடித்துக் கொண்டிருந்த அஜீத் குமாரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் அஜித் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கொலை நடந்த இடத்தில் கிடைத்த ஆவணங்களை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.