சாலையின் பள்ளத்தில் இறங்கிய சென்னை மாநகர பேருந்து…

சென்னை மணலி அருகே பராமரிப்பின்றி சிதிலமடைந்து இருந்த சாலையின் பள்ளத்தில் இறங்கி மாநகர பேருந்து விபத்துக்குள்ளானது.

சாலையின் பள்ளத்தில் இறங்கிய சென்னை மாநகர பேருந்து…

சென்னை மணலி அருகே பராமரிப்பின்றி சிதிலமடைந்து இருந்த சாலையின் பள்ளத்தில் இறங்கி மாநகர பேருந்து விபத்துக்குள்ளானது.

சென்னை மணலியில் இருந்து பிராட்வே செல்லும் மாநகர பேருந்து, நேற்று மாலை மணலி விரைவு சாலையில் சென்றுக்கொண்டிருந்தது.  சாலை பராமரிப்பின்றி மிகவும் சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில், மாநகர பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 10 அடி ஆழம் உள்ள பள்ளத்தில் இறங்கியது.

ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்திய நிலையில், பயணிகள் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர். இந்நிலையில் பழுதடைந்த சாலையை உடனடியாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.