சென்னை: தனியார் ஆண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து.. பெரும் பரபரப்பு!!

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் ஆண்கள் விடுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

சென்னை: தனியார் ஆண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து.. பெரும் பரபரப்பு!!

அமைந்தகரை ராசாக்காடன் பகுதி லட்சுமி அம்மாள் தெருவில் உள்ள தனியார் கட்டிடத்தின் நான்காவது  மாடியில் ஆண்கள் விடுதி உள்ளது. அங்கு மின் இணைப்பு நின்று வந்ததில் மின்னழுத்தம் ஏற்பட்டு எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து அருகிலிருந்த பொதுமக்கள் அளித்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து நேர்ந்தபோது, அதிர்ஷ்டவசமக ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் வேலைக்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ இல்லை என சென்னை வடக்கு மாவட்ட மாவட்ட தீயணைப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.