"மே மாதத்தில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை உயர்வு" சென்னை மெட்ரோ இரயில்!

"மே மாதத்தில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை உயர்வு" சென்னை மெட்ரோ இரயில்!

ஐபிஎல் போட்டி மற்றும் கோடை விடுமுறை எதிரொலி காரணமாக சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை மே மாதத்தில் உயர்ந்துள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தகவல் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சென்னையில் உள்ள மக்களுக்கும். மெட்ரோ இரயில் பயணிகளுக்கு போக்குவரத்து வசதியை அரித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட மே மாதத்தில் 5 லட்சத்து 82 ஆயிரத்து 575 பயணிகள் மெட்ரோ இரயில்களில் அதிகம் பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கையில் பயணிகள் பயளித்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. 

நடப்பு அண்டு ஜனவரி மாதத்தில் 66,07,458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63,00,282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69,99,341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 66,85,432 பயணிகளும் மற்றும் மே மாதத்தில் 72,68,007 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக 24.05 2023 அன்று 2,64,974 பயணிகள் பெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர் , மே மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 26,76,545 பயணிகள், பயண அட்டைகளை (Tiuvel Caad Ticketing System) பயன்படுத்தி 42,18,357 பயணிகள் டோக்கள்களை பயன்படுத்தி 6,748 பயணிகள், குழு பயணச்சீட்டு (Gmmp Ticket) முறையை பயன்படுத்தி 6,218 பயணிகள் மற்றும் சிங்காரா சென்னை அட்டையை (நேசிய பொது இயக்க அட்டைர் பயன்படுத்தி 5,316 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை (Travcd Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை சுத்தமாவும் சுகாதாரமாகவும் பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிரவாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க:சுற்றுப் பயணம் முடித்து சென்னை திரும்பிய முதலமைச்சா் சொன்னது என்ன?