சென்னை மேயருக்கு சிறந்த சமூக சேவைக்கான விருது - நெகிழ்ச்சியில் பிரியா ராஜன்

சென்னை மேயருக்கு சிறந்த சமூக சேவைக்கான விருது - நெகிழ்ச்சியில் பிரியா ராஜன்

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜனுக்கு  சிறந்த சமூக சேவைக்கான விருதினை வழங்கி கௌரவித்தது ரோட்டரி கிளப்

குடும்ப உறுப்பினர்கள் தலையீடு கூடாது” - 100வது நாளில் சென்னை மேயர் பிரியா  ராஜன் சிறப்புப் பேட்டி | Chennai Mayor Priya Rajan special interview -  hindutamil.in

ஒரு தொண்டு நிறுவனம் என்றால் அது சமூக சேவைக்கான நிறுவனமாக இருக்க வேண்டும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும் என சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் ரோட்டரி சங்கம் சார்பில் பல்வேறு துறை மற்றும் சமூக சேவையில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது 

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கலந்து கொண்டு சிறப்பு விருதுகளை வழங்கினார். மேலும் மேயர் பிரியாவிற்கு இளம் அரசியல் சாதனையாளர் விருதையும் ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்டது

மேலும் படிக்க | குற்றம் சாட்டப்பட்டவருக்கு 'மனசாட்சி இல்லை'.... மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்!!

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரியா ராஜன்

பெருநகர சென்னை மாநகராட்சியில் பல்வேறு சமூக அறக்கட்டளைகள் மூலம் பேரிடர் காலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேபோல இந்த கொரோனா தொற்றிலிருந்து மக்களை ரோட்டரி சங்கத்தினர் சிறப்பாக பாதுகாத்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளித்தனர்

மேலும், ஒரு தொண்டு நிறுவனம் என்றால் அது சமூக சேவைக்கான நிறுவனமாக இருக்க வேண்டும் மக்களுக்கு தேவையான உதவிகளை சென்றடைய தங்களைப் போல உதவிகளை தொடர்ந்து செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்