இருளில் மூழ்கிய சென்னை...அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

இருளில் மூழ்கிய சென்னை...அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

இதையும் படிக்க : மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வெளியேறுவதால் 100 அடிக்கு கீழ் சரியும் அணையின் நீர்வரத்து!

இந்நிலையில், சென்னையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.