அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் ஆட்கொல்லி புலியை பிடித்து மறுவாழ்வு அளியுங்கள்.... கமல் வேண்டுகோள்

கூடலூர் பகுதியில் சுற்றித்திரியும் புலியை அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் பிடிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் ஆட்கொல்லி புலியை  பிடித்து மறுவாழ்வு அளியுங்கள்....  கமல் வேண்டுகோள்

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மக்களின் உயிர் முக்கியம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை, ஆனால் புலியை கொல்வதும் தீர்வு அல்ல என தெரிவித்துள்ளார்.

மேலும் கூடலூர் பகுதியில் சுற்றித்திரியும் புலியை அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் பிடித்து மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வனத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.