பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு.. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில், தீர்ப்பு ஒருவாரத்தில்  வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு.. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பேரறிவாளன் விடுதலை குறித்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

இது தொடர்பாக, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு, இந்த வழக்கில் நீதிபதிகள் தீவிர ஆலோசனை மற்றும் ஆய்வுக்கு பின்னரே தீர்ப்பை வழங்குவார்கள் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்காலத்தில் மற்ற வழக்குகளில் பிரதிபலிக்காத வகையில், தீர்ப்பை வழங்குவார்கள் என்றும், ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் குறிப்பிட்டார்.