தூணில் கார் மோதி கோர விபத்து... 2 பேர் பலி... 6 பேர் படுகாயம்...

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சாலை ஓரத்தில் இருந்த தூணில் கார் மோதிய  விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூணில் கார் மோதி கோர விபத்து... 2 பேர் பலி... 6 பேர் படுகாயம்...

காரைக்குடி தெற்கு வீதியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பருடன் காரில் நேற்று திருச்செந்தூர் கோயிலுக்கு வந்துள்ளார். அங்கிருந்து கன்னியாகுமரிக்கு சென்றுவிட்டு காரைக்குடிக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது வரும் வழியில் கயத்தாறு அருகே அரசன்குளத்தின் ஊர் பெயர் பொறிக்கப்பட்டிருந்த  கான்கிரீட் தூண் மீது கார் மோதியது. இதில் அரிகிருஷ்ணன் நண்பர் விக்கி மற்றும் அவருடைய தாத்தா கணபதி ஆகிய இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.