ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் ஆர்வம்...

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை 13 ஆயிரத்து 542 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல்  செய்ய வேட்பாளர்கள் ஆர்வம்...

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை 13 ஆயிரத்து 542 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.

இந்தநிலையில், உள்ளாட்சித் தோதலில் போட்டியிடுவோருக்கான வேட்புமனுத் தாக்கல் 15-ம் தேதி தொடங்கி வரும் 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனு ஆய்வு செப்டம்பா் 23-ஆம் தேதி நடைபெறும். செப்டம்பா் 25-ஆம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 9 மாவட்டங்களில் கடந்த 3 நாள்களில் 13 ஆயிரத்து 542 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். 3ஆவது நாளான நேற்று கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு ஏழாயிரத்து 208 பேரும், ஊராட்சித் தலைவா் பதவிக்கு ஆயிரத்து 212 பேரும், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 135 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 12 பேரும் என மொத்தம் எட்டாயிரத்து 567 பேர் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.