பெரியாரை ஞாபகப்படுத்த மட்டுமே முடியும், அவமானப்படுத்த முடியாது - கமல்ஹாசன்

பெரியாரை ஞாபகப்படுத்த மட்டுமே முடியும், அவமானப்படுத்த முடியாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பெரியாரை ஞாபகப்படுத்த மட்டுமே முடியும், அவமானப்படுத்த முடியாது - கமல்ஹாசன்

கோவையை மாவட்டம் வெள்ளலூர் அருகே தந்தை பெரியாரின் உருவச் சிலைக்கு மர்மநபர்கள் செருப்பு மாலை அணிவித்தும், தலையில் குங்குமத்தை வைத்தும் அவமரியாதை செய்துள்ளனர். இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இச்சம்பவம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், ஒவ்வொரு முறை பெரியார் சிலையை அவமதிக்கும்தோறும் பெரியார் இன்னமும் வீச்சுடனும், வீரியத்துடனும் இன்றைய தலைமுறையிடம் சென்று சேருவார் என கூறியுள்ளார். மேலும், பெரியாரை ஞாபகப்படுத்த மட்டுமே முடியும் அவமானப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.