பிறந்தநாள் காணும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கேக் வெட்டி கொண்டாட்டம் - இனிப்பு வழங்கி மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

திருப்பத்தூரில் 14 அரகூ பள்ளிக் மாணவர்களின் பிறந்தநாளை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா கேக் வெட்டி  கொண்டாடினார்.

பிறந்தநாள் காணும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கேக் வெட்டி கொண்டாட்டம் - இனிப்பு வழங்கி மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

தமிழகத்தில் துன்பத்தில் தவிக்கும் குழந்தைகளை பாதுகாக்க சைல்டு லைன் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பிறந்த நாள் விழா நடைபெற்றது.

இதில், இன்று பிறந்தநாள் காணும், அரசு பள்ளியில் பயிலும் 14 மாணவர்களை அழைத்து, ஆட்சியர் அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா கலந்து கொண்டு, மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அத்துடன், சைல்டு லைன் அமைப்பு குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் மாணவ, மாணவியருக்கு எடுத்துரைக்கப்பட்டது.