சிவசங்கர் பாபா வழக்கு.. ஆசிரியைகளிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி திட்டம்

சிவசங்கர் பாபாவின் அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் உள்ள தரவுகளின் அடிப்படையில் 5 ஆசிரியைகளிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவசங்கர் பாபா வழக்கு.. ஆசிரியைகளிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி திட்டம்

 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவின் அறையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அந்த சோதனையின்போது லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வருகின்ற திங்கட்கிழமை சி.பி. சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராக உள்ள தீபா உட்பட 5 ஆ சிரியைகளிடம், லேப்டாப்பில் இருந்த தரவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.