FAST DRIVING செய்வோர்கள் கவனத்திற்கு : உங்கள ரகசிய கேமராக்கள் மூலம் வாச் பண்றாங்களாம்.. ஜாக்கிரதை!!

FAST DRIVING செய்வோர்கள் கவனத்திற்கு : உங்கள ரகசிய கேமராக்கள் மூலம் வாச் பண்றாங்களாம்.. ஜாக்கிரதை!!

அதிவேகத்தில் வாகனம் ஓட்டுவோரை கண்டறிய 367 சந்திப்புகளில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று போக்குவரத்து காவல் துறையினருக்கு மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  கலந்து  கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அடுத்த 4 மாதங்களுக்கு காலை மாலை என இரு வேளையும் போக்குவரத்து காவல் துறையினருக்கு மோர் வழங்க உள்ளதாகவும் கூறினார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது குடிசைமாற்று வாரிய குடியிருப்பு மோசடி புகார் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளதாகவும், அந்த மனு மீதான விசாரணை நடந்து வருவதாகவும்,  காவல் ஆணையர் தெரிவித்தார்.