தமிழகத்திலிருந்து புதுவைக்கு பேருந்து சேவை..! தமிழக அரசு அனுமதி.! 

தமிழகத்திலிருந்து புதுவைக்கு பேருந்து சேவை..! தமிழக அரசு அனுமதி.! 

ஜூலை 12-ம் தேதி முதல் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்து போக்குவரத்தை தொடங்க, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் வேகமாக பரவ தொடங்கிய காலத்தில், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் தனியார் மற்றும் அரசு பேருந்து சேவை ரத்தானது. 

இந்நிலையில், கொரோனா பரவல் குறைந்துள்ள காரணத்தால், புதுச்சேரிக்கு மட்டும் நாளை மறுநாள் முதல் பேருந்து சேவை தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் 2 மாதங்களுக்கு பிறகு தமிழகம்-புதுச்சேரி இடையே பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது. ஆனால், மற்ற மாநிலங்களுக்கு இடையேயான தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்திற்கு தடை தொடர்ந்து நீடிப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது.