சாலை விபத்தில் அண்ணன், தம்பி பலி... நண்பர்களுடன் சுற்றுலா சென்றபோது விபரீதம்...

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சுற்றுலா சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் அண்ணன் தம்பி இருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சாலை விபத்தில் அண்ணன், தம்பி பலி... நண்பர்களுடன் சுற்றுலா சென்றபோது விபரீதம்...

திருப்பூரை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் நரேன், தம்பி சுரேன் மற்றும் அவர்களது நண்பர்கள் நவீன், கார்த்திக் நிதீஷ் குமார், ஆகிய ஐந்து பேர்களும் நண்பர்கள்.இவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொடைக்கானல் சுற்றுலா செல்ல முடிவு செய்யப்பட்டனர். அதன்படி 5 நண்பர்களும் சொகுசு காரில் கொடைக்கானல் சென்று  இரு நாட்கள் தங்கி சுற்றுலா தளங்களை கண்டு ரசித்து விட்டு நேற்று காலையில் 5 பேர்களும் காரில் திருப்பூர் செல்ல புறப்பட்டனர். அப்போது காரை நரேன் ஓட்டியதாக கூறப்படுகிறது.

பழனி-தாராபுரம் சாலையில்  தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தன. அப்போது அலங்கியம் அடுத்த தாசநாய்க்கன் பட்டி அருகே வந்து கொண்டிருந்த கார்  கட்டுப்பாட்டை இழந்து  பள்ளத்தில் திடீரென இறங்கியது அதே வேகத்தில் சாலையோரம் இருந்த  புளியமரத்தில் பலத்த சத்தத்துடன் மோதியது. இந்த விபத்தில் நரேன், சுரேன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர்.

மற்றவர்களை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு உத்தரவின் பேரில் தாராபுரம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் அலங்கியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.