திமுக சார்பில் வெவ்வேறு வார்டுகளில் போட்டியிட்ட கணவன் மனைவி இருவரும் வெற்றி!!

ஒரே நகராட்சியில் கணவன் மனைவி இருவரும் வெவ்வேறு வார்டுகளில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி

திமுக சார்பில் வெவ்வேறு வார்டுகளில் போட்டியிட்ட கணவன் மனைவி இருவரும் வெற்றி!!

திருச்சி துவாக்குடி நகராட்சியில் ஒரே  கட்சியில் நின்ற கணவன்,மனைவி இருவரும் வெற்றி பெற்றனர்.எதிர்த்து போட்டியிட்டவர்கள் அனைவரும்  டெபாசிட் இழந்தனர்.

திருச்சி துவாக்குடி நகராட்சி வார்டு எண் 12 மற்றும் வார்டு எண் 15 இரண்டிலும் கணவன் மனைவி போட்டியிட்டனர்.
வார்டு எண் 12 ல் திமுக சார்பில் போட்டியிட்ட காயாம்பு 895 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வார்டு எண் 15 ல் திமுக சார்பில் போட்டியிட்ட அவரது மனைவி மீனா 712 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஒரே நகராட்சியில் கணவன் மனைவி இருவரும் வெவ்வேறு வார்டுகளில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.