பொதுத்துறை ஊழியர்களுக்கும் 20% வரை போனஸ்!

அனைத்து பொதுத்துறை ஊழியர்களுக்கும் 20% வரை போனஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

அதன்படி, சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மின்வாரிய ஊழியர்கள், போக்குவரத்துறை ஊழியர்கள், நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது.  

இதேபோல், வீட்டு வசதி வாரியம், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களுக்கு 10% சதவீதமும், இலாபம் ஈட்டிய பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு உபரி தொகையை கணக்கில் கொண்டு போனஸ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல், நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10% வரை போனஸ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.