சென்னையை ஜில்லென்று மாற்றிய மழை: மக்கள் மகிழ்ச்சி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னையை ஜில்லென்று மாற்றிய மழை: மக்கள் மகிழ்ச்சி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.இதனால்  மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒருசில மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், சில மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில்,சென்னை தேனாம்பேட்டை,அண்ணாசாலை, கோயம்பேடு, வடபழனி, கோடம்பாக்கம், நந்தம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது.

தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் பலமான காற்று வீசியதில், கோடம்பாக்கம் செல்லும் வழியில் பழமையான மரம் ஒன்று  சாலையின் நடுவே விழுந்தது. மேலும்  தமிழ்நாட்டின் வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் 
தெரிவித்துள்ளது.