வேன் மீது பைக் மோதிய பயங்கர விபத்து.. நாளை பிறந்தநாள் - இன்று உயிரிழந்த இளைஞர்!!

வேன் மீது பைக் மோதிய பயங்கர விபத்து.. நாளை பிறந்தநாள் - இன்று உயிரிழந்த இளைஞர்!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வேன் மீது பைக் மோதிய பயங்கர விபத்துக்குள்ளான இளைஞர், பிறந்தநாளுக்கு முந்தைய தினம் பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.

பழனி பாளையம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்பவர் பழனியில் குறுகிய சாலையில் வேகமாக ஒரு ஆட்டோவை முந்திச் செல்ல முயன்றார். அப்போது எதிரே சென்ற டூரிஸ்ட் வேன் மீது பயங்கரமாக மோதியதில் வாகனம் உடைந்து தூக்கி வீசப்பட்டார்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் முன்னதாக வெளியான நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். நாளை மனோஜ் பிறந்தநாள் காண இருந்தது குறிப்பிடத்தக்கது.