எண்ணெய் ஊற்றாமல் தண்ணீர் ஊற்றி அனைத்து சாமர்த்தியமாக செயல்பட்டார் பாக்கியராஜ் - ஆர்.கே.செல்வமணி!

எண்ணெய் ஊற்றாமல் தண்ணீர் ஊற்றி அனைத்து சாமர்த்தியமாக செயல்பட்டார் பாக்கியராஜ் - ஆர்.கே.செல்வமணி!

மோடி குறித்து பாக்யராஜின் கருத்து விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் மேற்கொண்டு எண்ணெய் ஊற்றாமல் தண்ணீர் ஊற்றி அனைத்து பாக்கியராஜ் சாமர்த்தியமாக செயல்பட்டதாக இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர். கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

ஹீரோக்கள் கதையில் தலையிடுவதை தவிர்த்து இயக்குநர்கள் கூறும் கதையில் நடித்துக் கொடுத்தால் தமிழ் சினிமா நன்றாக இருக்கும் என்றார். பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என்ற பாக்யராஜின் கருத்து பேச்சு பொருளாகியது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஆர். கே.செல்வமணி, இந்த விவகாரத்தில் பாக்யராஜ் மேலும் எண்ணெய் ஊற்றாமல் தண்ணீர் ஊற்றி அணைத்து சாமர்த்தியமாக செயல்பட்டதாக தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் சமீப காலங்களாக படத்தின் தயாரிப்பு செலவில் 80 சதவீதத்திற்கு மேல் ஹீரோக்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளத்திற்கு சென்று விடுவது மாறவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.