ஆன்லைன் சூதாட்ட சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு கண்டிப்பாக காரணம் இருக்கும் - குஷ்பு!

ஆன்லைன் சூதாட்ட சட்ட  மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு கண்டிப்பாக காரணம் இருக்கும் - குஷ்பு!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து அவதூறு பரப்பியதாக அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிக்க : அளவுக்கு அதிகமான சத்து மாத்திரை...உயிரை விட்ட மாணவி...உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் பேட்டி!

இதனை கண்டித்து பாஜ.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

அப்போது பேசிய குஷ்பு, தமிழ்நாடு ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட சட்ட  மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும் என்று கூறினார்.