தண்ணீர் தர மறுத்தத பா.ஜ.க. பிரமுகர்... திருப்பரங்குன்றம் அருகே பொதுமக்கள் சாலைமறியல்...

திருப்பரங்குன்றம் விளாச்சேரி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பு வாசிகளுக்கு தண்ணீர் தர மறுத்த பாஜக பிரமுகரை கண்டித்து குடியிருப்பு வாசிகள் சாலை மறியல் செய்தனர்.

தண்ணீர் தர மறுத்தத பா.ஜ.க. பிரமுகர்... திருப்பரங்குன்றம் அருகே பொதுமக்கள் சாலைமறியல்...

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்  அருகே உள்ள விளாச்சேரியில் தர்மசாஸ்தா விஹார் என்னும் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.  இங்கு மொத்தம் 162 அடுக்குமாடி குடியிருப்புகளில் 600க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்கு குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு என்று ஏற்கனவே முறையான சங்கம் இருந்து வந்த நிலையில் இவர்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட சங்க நிர்வாகத்தின் சார்பில் சந்தாவசூல் பணம் தரவில்லை  என்று குடிநீர் இணைப்பை துண்டித்துள்ளனர்.

இதுகுறித்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் தொலைபேசி மூலம் புகார் அளித்தும் காவல்துறை வந்து நேரடியாக விசாரணை செய்ததில் பாஜக பிரமுகர் அரசியல் செல்வாக்கால் தண்ணீர் திறந்துவிட மறுத்துவிட்டனர். 

ஆகையால் போலீசார் குடியிருப்புவாசிகளை நேரடியாக வந்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் செய்ய கூறி சென்றனர். இதனையடுத்து குடியிப்பு வாசிகள் தண்ணீர் திறந்துவிட கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.