டியூசன் முடிந்து வீட்டிற்கு சென்ற சிறுமியை காரில் கடத்த முயற்சி....ஓட்டுநர் கைது...!!

சென்னை பெரம்பூரில் 8 வயது சிறுமியை, கார் டிரைவர் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டியூசன் முடிந்து வீட்டிற்கு சென்ற சிறுமியை காரில் கடத்த முயற்சி....ஓட்டுநர் கைது...!!

சென்னை பெரம்பூர் சின்னைய்யா நியூ காலனி 4-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்.  இவர் தனியார் மொபைல் ஷோரூம் கம்பெனியில் வேலை செய்கிறார். இவரது எட்டு வயது பெண்  குழந்தை அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.

இதற்கிடையில் இந்த சிறுமி நேற்று காலை 6 மணிக்கு பெரம்பூர் வடிவேல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் டியூஷன் படித்து விட்டு  காலை 8 மணி அளவில் டியூஷன் முடிந்து வீட்டிற்கு வடிவேல் தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். 

அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெள்ளை நிற காரில் வந்து சிறுமியிடம் முகவரி கேட்டுள்ளார் பின்பு சிறுமியை  காரில் ஏற்றிக்கொண்டு கோவிந்தசாமி தெரு வழியாக சென்று கொண்டிருந்தார். அந்த சமயம்  குழந்தை கூச்சல் போடவே அங்கேயே சிறுமியை இறக்கி விட்டுள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த சிறுமியின் உறவினர் ஷகிலா  என்பவர் குழந்தையை மீட்டு, இது குறித்து சிறுமியின் தந்தையான மகேஷ்க்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடம் சென்று மகேஷ் சிறுமியை மீட்டது மட்டுமல்லாமல், இது தொடர்பாக ,செம்பியம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

தகவலின் பேரில் செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து காரின் பதிவு எண்ணை வைத்து துரை பாபு வயது  என்ற நபரை கைது செய்தனர்.

 பிடிபட்ட நபர் திருவிக நகர் 6வது மண்டலத்தில் ஒப்பந்தம் அடிப்படையில்  ஓட்டுநராக வேலை செய்து  வருவதாகவும் மற்ற நேரத்தில் யூபர் மூலம் வாடகைக்கு கார் ஓட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும்  சம்பவத்தன்று குழந்தையை காரில் ஏற்றி சிறிது நேரம் சுற்றி உள்ளார். அதன் பிறகு சிறுமி கூச்சலிடவே அங்கேயே விட்டுச் சென்றுள்ளார்

எனவே சிறுமியை கடத்தும் நோக்கில் அவர் செயல்பட்டதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்த செம்பியம் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.