ஒரே நேரத்தில், ஒரு மணி நேரம் ஒற்றை காலில் நின்று சிலம்பம் சுற்றிய நிகழ்ச்சி...!

சிவகங்கையில் உலக சாதனை முயற்சிக்காக 500 மாணவர்கள் இணைந்து ஒரே நேரத்தில், ஒரு மணி நேரம் ஒற்றை காலில் நின்று சிலம்பம் சுற்றிய நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

ஒரே நேரத்தில், ஒரு மணி நேரம் ஒற்றை காலில் நின்று சிலம்பம் சுற்றிய நிகழ்ச்சி...!

சிவகங்கையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் மூவேந்தர் சிலம்பம் மற்றும் தமிழரின் பாரம்பரிய கலை வளர்ச்சி கழகம் மற்றும் குளோபல் வேர்ல்ட் ரெக்கார்டு நிறுவனம் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில், 500 மாணவர்கள் இணைந்து ஒரே நேரத்தில், ஒரு மணி நேரம் ஒற்றை காலில் நின்று சிலம்பம் சுற்றி சாதனை முயற்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்வை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் மாணவர்கள் ஒற்றை காலில் நின்று பல்வேறு முறைகளில் சிலம்பம் சுற்றி காண்போரை வியப்பில் ஆழ்த்தினர். இந்த உலக சாதனை முயற்சியில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இறுதியாக இந்த சாதனை நிகழ்வில், பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.