சட்டசபை: பைத்தியகாரர்களின் கூடாரமாகவுள்ளது தமிழக அமைச்சர்களை விமர்சிக்கும் எச். ராஜா

சட்டசபை: பைத்தியகாரர்களின் கூடாரமாகவுள்ளது  தமிழக அமைச்சர்களை விமர்சிக்கும் எச். ராஜா

தமிழக அமைச்சர்களுடைய செயல்பாடுகள் மிகவும் அருவருக்கத்தக்க சூழ்நிலையில் போய்க் கொண்டிருக்கிறது. நேற்று முன் தினம் அமைச்சர் பொன்முடியின் தொகுதியான திருக்கோவிலூரில் நடைபெற்ற கூட்டத்தில், அந்த தொகுதியை சேர்ந்த பெண்கள், எங்கள் கிராமத்திற்குத் தண்ணீர் வரவில்லை எனக் கூறியதற்கு, அதற்கு நீயெல்லாம் ஒட்டு போட்டு கீழிச்ச என அமைச்சர் பேசியுள்ளார்.

மேலும் படிக்க | பாஜக தலைவரை ஒன்னாம் நம்பர் 420 - திமுக அமைச்சர்

இதே போல் பல்வேறு அமைச்சர்கள் அவர்களது கட்சியினரை அடித்தார்கள். இன்று தமிழகத்தில் உள்ள அமைச்சர்களின் சபை, பைத்தியக்காரர்களின் கூடாரமாகவுள்ளது. அமைச்சர் தாக்கி எந்த உறுப்பினர் உயிரிழக்கப்போகிறானோ தெரிய வில்லை. அந்தளவிற்கு மிகவும் மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்களின் பிரச்சனைக்குச் சீமான் போன்ற சமூக வலைத்தளங்கள், இவர்களை பற்றி விஷத்தைக் கக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.

மேலும் படிக்க | பட்ஜெட்டில் 100 நாள் வேலைக்கு நிதியை குறைத்த ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சுப.வீரபாண்டியன், வெளிமாநிலத்தவர்களுக்கு வந்தவர்களுக்கு நியாயவிலைக்கடை பொருட்கள் கொடுக்கலாமா, வாக்குரிமை கொடுக்கக் கூடாதா எனத் தெரிவித்துள்ளார். இதனை கூற நீ யார், அரசியல் சட்டத்தில் எங்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் எனத் தெரிவித்தார்.