9 காளைகளை பிடித்த அரவிந்த் ராஜ் என்ற வீரர் உயிரிழப்பு..!

9 காளைகளை பிடித்த அரவிந்த் ராஜ் என்ற வீரர் உயிரிழப்பு..!

புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை பிடித்த அரவிந்த்ராஜ் என்ற வீரர் ஆறாவது சுற்றின் போது காளை முட்டியதில் உயிரிழந்தார்,.

உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை மஞ்சள் மலை ஆற்று மைதான திடலில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது,. இந்த போட்டியில்  9 காளைகளை பிடித்து 3ஆம் இடத்திலிருந்த மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ்   10 வது  காளையை பிடிக்கும் நோக்கில் ஆயத்தமானார். அப்போது எதிர்பாராத விதமாக சீறிப்பாய்ந்த வந்த காளை  வயிற்றில் குத்தி   அரவிந்த் ராஜை தூக்கி வீசியது. இதில் கீழே  சரிந்து விழுந்த மாடுபிடி வீரர் அரவிந்தராஜ் மயக்கமடைந்தார்.

இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்க்பபட்டது.   ஆனால் சிகிச்சை பலனின்றி அரவிந்த ராஜ் உயிரிழந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழத்தியுள்ளது.  

இதேபோல், 16 காளைகளை அடக்கி முதலிடத்தில் இருந்த மணி என்ற மாடுபிடி வீரரை முழங்கையில் காளை முட்டியதில் காயமடைந்தார். சற்று நேரத்திற்குப்பின் அவர் மீண்டும் களமிறங்கி, தற்போதுவரை 19 காளைகளை அடக்கியுள்ளார். இதுவரை காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 ஐ கடந்துள்ளது.

இதனிடையே  திருச்சி மாவட்டம் சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர் ஒருவர் காளை முட்டியதில் உயிரிழந்தார். மூன்றாவது சுற்று முடிவடைந்து நான்காவது சுற்று நடைபெற்ற போது   அரவிந்தை காளை முட்டிய நிலையில்  அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி  உள்ளது.