ரவுடி பேபி சூர்யாவை கைது செய்யுங்க...காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பெண்கள் போராட்டம்...!

ரவுடிபேபி சூர்யா-வை கைது செய்யக்கோரி பெண்கள் சிலர் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ரவுடி பேபி சூர்யாவை கைது செய்யுங்க...காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பெண்கள் போராட்டம்...!

கடந்த சில நாட்களாக டிக்-டாக் பிரபலம் ரவுடிபேபி சூர்யா குறித்த பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ரவுடிபேபி சூர்யா குடும்பப் பிரச்சனைகளில் சிக்கி கஷ்டத்தில் இருக்கும் பெண்களை குறிவைத்து, அவர்களை மூளைச்சலவை செய்து வெளிநாடுகளுக்கு பாலியல் தொழிலுக்காக அனுப்பி வருவதாகவும்,

குடும்பப் பெண்கள் முதல் சிறுமிகள், குழந்தைகள் என அனைவரது புகைப்படங்களையும் மார்ஃபிங் செய்து சமூக வலைதளத்தில் பரப்பி விடுவேன் என மிரட்டுவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியும் சென்னை வேள்ச்சேரியைச் சேர்ந்த ஜெனிஃபர், மேடவாக்கத்தைச் சேர்ந்த தனம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் குறித்து முறையிட வந்தவர்களை நீண்ட நேரம் காக்க வைத்து விசாரிக்காமல் போலீசார் அனுபியதாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து வேள்ச்சேரி பகுதியைச் சேர்ந்த பெண் ஜெனிஃபர், மேடவாக்கத்தைச் சேர்ந்த பெண் தனம் உள்ளிட்ட பெண்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் கண்டன முழக்கங்களுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.