என்னை எதிர்த்து பேசுகிறாயா...ஓட்டல் உரிமையாளருடன் காவலர் தகராறு...கடைக்குள் புகுந்து தாக்கியதால் பரபரப்பு.!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆட்டோவை வேகமாக ஓட்டியதாக கூறி ஓட்டல் உரிமையாளரை, காவலர் தாக்கும் காட்சி சமூகவலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

என்னை எதிர்த்து பேசுகிறாயா...ஓட்டல் உரிமையாளருடன் காவலர் தகராறு...கடைக்குள் புகுந்து தாக்கியதால்  பரபரப்பு.!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முள்ளுக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவர் அதே பகுதியில் உணவகம்  நடத்தி வருகிறார். இவரது வீட்டின் அருகிலேயே பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆயில்பட்டி காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்திரன் ஆட்டோவில் மனையுடன் வந்துள்ளார். அப்போது எதிரே வந்த காவலர் பாபு, ஆட்டோவை நிறுத்தி ஏன் வேகமாய் வந்தாய் என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அதற்கு சந்திரன் நான் மெதுவாக தான் வந்தேன், நீங்கள் தான் வேகமாக வந்தீர்கள் என கூறியதையடுத்து, ஆத்திரமடைந்த காவலர் பாபு, என்னை எதிர்த்தா பேசுகிறாய் என மிரட்டி ஆபாசமாக திட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரன் அங்கிருந்து புறப்பட்டு கடைக்கு வந்துள்ளார். அவரை விடாது பின் தொடர்ந்து வந்த காவலர் பாபு, சந்திரனை அவரது கடைக்குள் புகுந்து கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து ராசிபுரம் துணை காவல் கண்காணிப்பாளரிடன் புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில் தற்போது காவலர் கடைக்குள் புகுந்து தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.