திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையர் நியமனம்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையர், செயல் அலுவலராக சி.குமரதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையர், செயல் அலுவலராக சி.குமரதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையர் கூடுதல் பொறுப்பை அன்புமணி கவனித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பொது மற்றும் நிர்வாக நலன் கருதி, இணை ஆணையர், செயல் அலுவலர் பணியிடத்துக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை, இணை ஆணையராக பணிபுரியும் குமரதுரையை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையர், செயல் அலுவலர் பணியிடத்திற்கு முழு கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருக்கோயில் இணை ஆணையர், செயல் அலுவலர் பணியிடத்தின் அனைத்து பொறுப்புகளையும் குமரதுரையிடம் ஒப்படைத்துவிட்டு கூடுதல் பொறுப்பில் இருந்து அன்புமணி விடுபட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.