”மக்கள் விரோத சக்திகள் நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்படுவார்கள்” - மு.க.ஸ்டாலின்

மக்கள் விரோத சக்திகள் எந்த உருவத்தில் வந்தாலும் நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூரில் நடைபெற்ற  திமுக பாசறைக் கூட்டத்தில் உரையாற்றி இருக்கிறார்.

திருவள்ளூர் கலைஞர் திடலில் சென்னை மண்டல திமுக வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்ட வாக்குச் சாவடி பொறுப்பாளர்களும் நிர்வாகிகளும் பங்கேற்றனர். 

கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்ற முதலமைச்சர், உடல்நிலை சரியில்லாததால் தன்னுடைய உரையை அமைச்சர் உதயநிதி படிக்குமாறு கூறினார்.

இதையும் படிக்க : ஆர்.எஸ். பாரதியின் கருத்துக்கு ஆளுநர் கண்டனம்...!

உரையில், திமுக அரசு கொண்டு வந்திருக்கக்கூடிய அனைத்து திட்டங்களையும் மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மக்கள் விரோத சக்திகள் எந்த உருவத்தில் வந்தாலும் நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய உரையில் கூறியிருந்தார். 

முன்னதாக கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி, முறைகேட்டில் ஈடுபட்ட தொழிலதிபர்களை மட்டுமே மத்திய பாஜக அரசு காப்பாற்றியிருக்கிறது என்றும், பாஜகவை பார்த்து திமுக கிளை செயலாளர் கூட பயப்பட மாட்டார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.