ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு புகார்... பெண் அளித்த பகீர் குற்றச்சாட்டு...

தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகார் கூறப்பட்டுள்ளது.

ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு புகார்... பெண் அளித்த பகீர் குற்றச்சாட்டு...

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஆவினில் வேலைவாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்தப் புகாரில் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்டோர் மீது விருதுநகர் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்குகளில் முன்ஜாமீன்கோரி ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதனால், எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டதால், வெள்ளிக்கிழமை விருதுநகரில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் திடீரென தலைமறைவானார். அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கவும் காவல்துறை திட்டமிட்டப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.  

இந்நிலையில் இந்தநிலையில் அவர் மீது மேலும் ஒரு மோசடி புகார் கூறப்பட்டுள்ளது. அதில் சத்துணவுப் பணியில் வேலை வாங்கி தருவதாக  10 லட்சம் ரூபாய் மோசடி  செய்ததாக சாத்தூரை சேர்ந்த பெண் ஒருவர்  விருதுநகர் எஸ்.பி-யிடம் புகார் அளித்துள்ளார்.