முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு!! ஏன் தெரியுமா?
திமுக பிரமுகரை தாக்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் சென்னை தண்டையார் பேட்டை போலீசார், ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
தாக்குதல், கலகம் செய்ய தூண்டுதல், கொலை மிரட்டல், ஆபாசமாக திட்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்த நிலையில் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளில் சாலை மறியலில் ஈடுபட்டதாக 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்படி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.