அண்ணாமலையின் பேச்சு எதுவும் எடுபடாது - அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்!

அண்ணாமலையின் பேச்சு எதுவும் எடுபடாது - அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு எடுபடாது என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 34 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடத்தின் பூமி பூஜையில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை துவங்கி வைத்தார்.  

இதையும் படிக்க : நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் நிதி யாருடையது? முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஊழல் குற்றச்சாட்டு குறித்து பொய்யான பிம்பத்தை உருவாக்கி மக்களை திசை திருப்ப அண்ணாமலை பார்ப்பதாகவும், அவருடைய பேச்சு எதுவும் எடுபடாது எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.