"கர்ப்பிணி பெண்கள் நிதி உதவி திட்டத்தில் ஊழலா?" அண்ணாமலை கேள்வி!

"கர்ப்பிணி பெண்கள் நிதி உதவி திட்டத்தில் ஊழலா?" அண்ணாமலை கேள்வி!

தமிழகத்தில் 2 ஆண்டுகளாக கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை  தி.மு.க. அரசு முடக்கி வைத்திருப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

கர்ப்பிணி பெண்கள் நலனுக்காக மத்திய அரசின் மாத்ரு வந்தனா திட்டம் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 1987-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்துடன் இணைந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஐந்து தவணைகளாக ரூ.14,000 மற்றும் ரூ. 4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ரூபாய் 257 கோடி நிதி வழங்கியிருக்கிறது. இந்த நிதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு காரணங்கள் கூறி கர்ப்பிணி பெண்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படவில்லை என ஊடகங்களில் செய்தி வந்துள்ளது ஊழல் திமுக அரசின் மெத்தன போக்கை தமிழக பாஜக கடுமையாக கண்டிக்கிறது. 

தமிழகத்தில் ஊழல் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்கள் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றாக முடக்கப்பட்டு வருகின்றன மகளிர்க்கு வழங்கப்பட்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தினார்கள் பட்டியல் பிரிவு மக்களுக்காக மத்திய அரசு வழங்கிய பல்லாயிரம் கோடி நிதியை பயன்படுத்தாமல் திருப்பி வழங்கினார்கள். தமிழக பள்ளி மாணவர்களை தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்பாமல் அவர்கள் வாய்ப்பை பறித்தார்கள். கர்ப்பிணி பெண்களுக்கான நிதி உதவி திட்டத்தையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக முடக்கி இருக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. கர்ப்பிணி பெண்களை அலைக்கழிக்கும் மெத்தன போக்கை கண்டிக்கிறோம் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் விளையாடக் கூடாது என திமுக அரசை தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறது.

இதையும் படிக்க:டாஸ்மாக்கில் ரூ.10 அதிகமாக வாங்கினால் சஸ்பெண்ட்!