ஜெ.பி.நட்டாவுடன் அண்ணாமலை சந்திப்பு..! திமுக‌ கோப்புகள் இரண்டாம் பாகம் குறித்து ஆலோசனை?.

ஜெ.பி.நட்டாவுடன் அண்ணாமலை சந்திப்பு..!  திமுக‌ கோப்புகள் இரண்டாம் பாகம் குறித்து ஆலோசனை?.

டெல்லியில் அகில இந்திய பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்திப்பு.

ஒரு நாள் பயணமாக இன்று காலை திடீரென சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றுள்ள தமிழக பா.ஜ.க.‌மாநில தலைவர் அண்ணாமலை அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி‌.நட்டாவை பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் தற்போது சந்தித்து வருகிறார்.

இந்த சந்திப்பின் பொழுது தமிழகத்தின் தற்போதைய அரசியல் கள நிலவரம், ஆளுநர் தமிழக அரசு மோதல் விவகாரம், செந்தில் பாலாஜி விவகாரம், தி. மு.க‌ கோப்புகள் இரண்டாம் பாகம் வெளியீடு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழக பா.ஜ.க. மேற்கொண்டு வரும் தேர்தல் பணிகள் குறித்தும் நட்டாவிடம் விரிவாக எடுத்துரைத்து வருகிறார் அண்ணாமலை. இதையடுத்து இன்று மாலையே தமிழகம் திரும்புகிறார் அண்ணாமலை, வருகிற 28ஆம் தேதி ’என் மண் என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்க இருப்பது தொடர்பாக ஆலோசிப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க    | "சட்டத்தின்படியும் மனசாட்சியின்படியும் பணியாற்றுங்கள்" முதலமைச்சர் அறிவுரை!