பள்ளி குழந்தைகளை ஏற்றி கொண்டு வந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்து..!

திருப்பத்தூரில் பள்ளி குழந்தைகளை ஏற்றி கொண்டு வந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்து..!

பள்ளி குழந்தைகளை ஏற்றி கொண்டு வந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்து..!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆரிப் நகர் பகுதியில் சேர்ந்த சையது அகமது என்பவரின் மகன் பாசிர்(30). இவர் இன்று அல்மீன் மெட்ரிக்  பள்ளியிலிருந்து சுமார் பத்து பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோவில் வீடு சென்று கொண்டிருந்தார். அப்போது சின்ன கடை தெரு பகுதியில் திடீரென ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த நிலையில் பள்ளி குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் முதல் உதவி  சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பள்ளி குழந்தைகளை அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.