தமிழக போலீஸ் வரலாற்றில் முதல்முறை... உளவுத்துறைக்கு கூடுதலாக ஒரு எஸ்.பி.,

தமிழக போலீஸ் வரலாற்றில் முதல் முறையாக உளவுத்துறைக்கு கூடுதலாக ஒரு எஸ்பியை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக போலீஸ் வரலாற்றில் முதல்முறை... உளவுத்துறைக்கு கூடுதலாக ஒரு எஸ்.பி.,

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் முக்கிய பொறுப்புகளில் உள்ள ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்வது வாடிக்கையான ஒன்று, அதன் படி  தலைமை செயலாளர், தமிழக டி.ஜி.பி, உளவுத்துறை அதிகாரிகள், சென்னை காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் என ஆட்சிமாற்றம் ஏற்பட்ட  கடந்த 4 மாதங்களில் பலர் மாற்றாப்பட்டுள்ளணர்.

அந்த வரிசையில் தற்போது எஸ்.எஸ்.பி என அழைக்கப்படும் உளவுத்துறை எஸ்.பி பதவியில் ஏற்கனவே அரவிந்தன் இருந்து வரும் நிலையில் கூடுதலாக ஒரு எஸ்பியயை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், டிஐஜியாக ஆசியம்மாள், எஸ்எஸ்பியாக அரவிந்தன் ஆகியோர் உள்ளனர். ஐஜி பதவி காலியாகவே உள்ளது.

உளவுத்துறையில் உயர் அதிகாரிகள் இருந்தாலும் எஸ்எஸ்பி என்றழைக்கப்படும் எஸ்பிக்குத்தான் நாட்டு நடப்பு அத்துபடியாக இருக்கும். காரணம் அவரிடம்தான் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் உள்ள அத்தனை நிகழ்வுகளும், தகவல்களும் கீழ்மட்ட அதிகாரிகள் மூலம் போய்ச்சேரும். அவர்தான் தன்னுடைய உயர் அதிகாரிகளுக்கு தகவல்களை அளிப்பார். அந்தப் பதவியில் இப்போது அரவிந்தன் உள்ளார்.

இந்நிலையில் தமிழக போலீஸ் வரலாற்றில் முதல் முறையாக உளவுத்துறைக்கு மேலும் ஒரு எஸ்எஸ்பி பணியிடத்தை உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தப் பதவியில் சரவணனை நியமித்து உள்துறை செயலர் எஸ்.கே. பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இவர் இப்போது ஒருங்கிணைந்த குற்றங்கள் தொடர்பான உளவுப் பிரிவு எஸ்பியாக உள்ளார்.