மோடி பிரதமராக வந்த பிறகுதான் இதெல்லாம் நடந்தது- பாஜக அண்ணாமலை  

இந்திய சரித்திரத்தில், மோடி பிரதமராக வந்த பிறகுதான் மாநில அரசுகளுக்கும் மத்திய அரசிடமிருந்து அதிகபட்சமான நிதி வழங்கப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மோடி பிரதமராக வந்த பிறகுதான் இதெல்லாம் நடந்தது- பாஜக அண்ணாமலை   

இந்திய சரித்திரத்தில், மோடி பிரதமராக வந்த பிறகுதான் மாநில அரசுகளுக்கும் மத்திய அரசிடமிருந்து அதிகபட்சமான நிதி வழங்கப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ம. பொ.சி யின் நினைவை போற்றும் வகையில், சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அறக்கட்டளை சார்பில், சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ண கான சபாவில், விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், 2020 ஆம் ஆண்டுக்கான விருதுகள் முன்னாள் அமைச்சரும் மூத்த அரசியல் தலைவருமான எச்.வி.ஹண்டேவுக்கும், வானவில் பண்பாட்டு மைய நிறுவனர் ரவி மற்றும் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் தலைவர், சங்கர வேலு ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

2021ம் ஆண்டுக்கான ம.பொ.சி விருது, பத்திரிகையாளர்கள் ராம நம்பி நாராயணன், கோலாகல சீனிவாசன் மற்றும் கல்வி நிறுவனர் பாஸ்கர் சுப்பிரமணியன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. இந்த விருது வழங்கும் நிகழ்வில் வி.ஜி.பி குழும தலைவர் வி.ஜி சந்தோசம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என். ஆர். தனபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அனைவருக்கும் விருதுகளை வழங்கினார். பின்னர் பேசிய அண்ணாமலை, மாநில அரசுகளின் குறைகளை கேட்டு சரி செய்யும் வகையில் ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.