சிஷ்யையை திருமணம் செய்து கொண்ட அகோரி சாமியார்...இணையத்தில் வைரலாகும் வீடியோ

திருச்சி  அருகே அகோரி ஒருவர் தனது சிஷ்யையை திருமணம் செய்து கொண்ட வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது, 

சிஷ்யையை திருமணம் செய்து கொண்ட அகோரி சாமியார்...இணையத்தில் வைரலாகும் வீடியோ

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில், காசியில் பயிற்சிபெற்ற அகோரி மணிகண்டன் என்பவர், ஜெய் அகோரகாளி சிலையைப் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த எட்டு வருடமாக கல்கத்தாவை சேர்ந்த பிரியங்கா என்ற பெண் அகோரி பயிற்சி பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை அந்த பெண்ணுக்கும், மணிகண்டனுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது அகோரி மணிகண்டன் தன் உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு அகோரி கோலத்தில் மாலை மாற்றி கொண்டு பெண் அகோரியை திருமணம் செய்தார்.

முன்னதாக சிறப்பு யாகம் நடைபெற்றது, யாகத்தின் போது சக அகோரிகள் தமரா மேளம் அடித்தும், சங்கொலி எழுப்பி ஹர ஹர மகாதேவா என்று முழங்கினார். இவர்களின்  திருமணத்தை அகோரி மணிகண்டன், குருவான சித்தர் வழியை சேர்ந்த மதுரை பால்சாமி என்பவர்  நடத்தி வைத்தார். தற்போது இந்த வீடியோ  சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.