11 ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள்... தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

தெற்கு ரயில்வேயின்  11 ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அந்தோதயா 06041 மற்றும் பலருவி 06042 ஆகிய இரண்டு ரயிலுக்கும் கூடுதல் நிறுத்தங்களை அறிவித்துள்ளது.

அதன்படி, செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் உழவன் விரைவு ரயில் கடலூர் துறைமுகத்திலும், தாம்பரம் -  நாகர்கோயில் அந்தியோதயா விரைவு ரயில்  சாத்தூரிலும் , திருநெல்வேலி-பாலக்காடு பாலருவி  விரைவு ரயில் ஏற்றமானூரிலும் நின்று செல்லும் என்று அறிவித்துள்ளது. 

இதேபோல், செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் திருப்பதி-ராமேஸ்வரம் விரைவு ரயில் ஆரணி சாலையிலும், திருப்பதி-மன்னார்குடி பாமணி விரைவு ரயில் மற்றும் செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் போளூர் மற்றும்  திருக்கோயிலூரிலும் நின்று செல்லும் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க || சட்டமேதை குறித்து அவதூறு பேசிய ஆர் பி வி எஸ் மணியன் அதிகாலையில் கைது!!