திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...திருமாவளவன்...!!

நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் தகராறில் ஈடுபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...திருமாவளவன்...!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறுகையில்,

தமிழகத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி வரி பாக்கி அதிமுக ஆட்சியின் போதே நிலுவையில் உள்ளது என்றும் கொரோனா தடை உத்தரவை காரணம் காட்டி மத்திய அரசு இன்னும் வழங்காமல் உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது இது கண்டிக்கத்தக்கது என கூறிய அவர், மோடி அரசு உடனடியாக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி வரி பாக்கியை வழங்க வேண்டும் என கூறினார்.

நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் தகராறில் ஈடுபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ,கருத்துக்கு கருத்துதான் எடுத்து வைக்கப் படவேண்டும் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றார்.

மேலும் முன்னாள் அமைச்சரை கைது செய்ய நடவடிக்கை தீவிரப்படுத்தபட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் திமுக அரசு தடுப்பதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார் , எல்லா அதிமுகவினர் மீதும் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட விடவில்லை குற்றச்சாட்டின் அடிப்படையில் மாநில காவல்துறை சட்டபூர்வமாக கடமையை செய்கிறார்கள் இதில் அரசு உள்நோக்கத்தோடு அதிமுகவை பழி வாங்குகிறது என பார்க்கத் தேவையில்லை என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இயற்கை சீற்றங்களின் போது மத்திய குழு வந்து ஆய்வு செய்வதோடு விட்டுவிடுகிறார்கள் போதிய நிதியை இதுவரை ஒதுக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.