தந்தையின் விருப்பப்படி, உடலை மருத்துவ கல்லூரிக்கு வழங்கிய மகன்கள்...!

மறைந்த ஓய்வுபெற்ற ஆசிரியர், அவரது மரண சாசனத்தின்படி உடலை மருத்துவக்கல்லூரிக்கு வழங்கிய மகன்கள்..!

தந்தையின் விருப்பப்படி, உடலை மருத்துவ கல்லூரிக்கு வழங்கிய மகன்கள்...!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் சுந்தர மகாலிங்கம் (82). இவர் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி அன்று அவருடைய சொந்த ஊரான வத்திராயிருப்பில் காலமானார். மேலும் சமூக சீர்திருத்தவாதியாக இருந்த அவர், 5 ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய உயிர் சாசனத்தில் தனக்கு எந்தவித சடங்கு சம்பரதாயங்களும் செய்யக்கூடாது. 

மேலும் தன்னுடைய உடலை மருத்துவ மாணவர்கள் ஆராய்ச்சிக்கு பயன்படுத்துவதற்காக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொடுத்து விட வேண்டும் என்று எழுதி வைத்துள்ளார். அதன் அடிப்படையில் இன்று  சுந்தர மகாலிங்கத்தின் உடலை அவரது மகன்கள் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் ஒப்படைத்தனர். அப்போது மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பங்கெற்று ஓய்வு பெற்ற ஆசிரியரின் உடலை ஒப்படைத்தனர்.