பீடி சுற்றும் மாற்று திறனாளி பெண்ணின் மனு ஏற்பு... மக்கள்நீதிமய்யம் சார்பில் போட்டியிடுகிறார்....

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் மக்கள் நீதி மையம் சார்பில் 12-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பீடி சுற்றும் மாற்று திறனாளி பெண்ணின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது.

பீடி சுற்றும் மாற்று திறனாளி பெண்ணின் மனு ஏற்பு... மக்கள்நீதிமய்யம் சார்பில் போட்டியிடுகிறார்....

தென்காசி மாவட்டம் குருவன்கோட்டையை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜெயசீலி, பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். நடிகர் கமலஹாசன் மீது அதிக ஈடுபாடு மற்றும் ரசிகையாக இருந்ததால், 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராக சேர்ந்து, பல்வேறு பொது சேவைகளை செய்து வருகிறார்.

உள்ளாட்சி தேர்தலில் ஆலங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 12-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட, மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜெயசீலி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், வேட்பாளர்களின் வேட்புமனுக்கள், ஆலங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் பரிசீலனை செய்யப்பட்டது. அப்போது மாற்றுத்திறனாளியான ஜெயசீலியின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.