அ.தி.மு.கவுடன் இணைகிறதா அ.ம.மு.க. ..? டி.டி.வி. தினகரன் விளக்கம்...

கொடநாடு எஸ்டேட் சம்மந்தப்பட்ட விஷயங்கள் அவருக்கு தெரியும் என்பதால் விவேக்கிடம் விசாரணை நடத்தப்படலாம் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

அ.தி.மு.கவுடன் இணைகிறதா அ.ம.மு.க. ..? டி.டி.வி. தினகரன் விளக்கம்...

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூரில் உள்ள தனியார் விடுதியில் ஐக்கிய கிறிஸ்துமஸ் பெருவிழா இன்று நடைபெற்றது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்ற கிறிஸ்துமஸ் விழாவில்   இயேசுவின் பிறப்பு நிகழ்வு, உள்ளிட்ட கொண்டாட்டங்களில் பங்கேற்ற டிடிவி தினகரன், குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு கிருஸ்துமஸ் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.டி.வி. தினகரன், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் விவேக்கிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்துவது நடை முறைதான் என்றார். மேலும், எஸ்டேட் பற்றிய தகவல்கள் அவருக்கு தெரியும் என்பதால் தனிப்படை போலீசார் விவேக்கிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று கூறினார்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அ.தி. மு.க. போராட்டம் நடத்துவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், எதிர்கட்சியாக இருந்தால் போராட்டம் நடத்துவது வழக்கம்தான், கடந்த ஆட்சியில் எதிர்கட்சியாக இருந்த தி முக செய்ததை தற்போது அ.தி. மு.க. செய்கின்றனர். இவர்களுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றார். தொடர்ச்சியாக வருகின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அ.ம. மு.க. - அ.தி. மு.க. இணைப்பு இருக்குமா என்ற செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கிடையாது என  தலையாட்டி பதில் சொல்லி புறப்பட்டார்.