அடுத்த 10 அமாவாசைக்குள் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்...பொள்ளாச்சி ஜெயராமன்...!!!

தமிழகத்தில் அடுத்த 10 அமாவாசைக்குள் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

அடுத்த 10 அமாவாசைக்குள் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்...பொள்ளாச்சி ஜெயராமன்...!!!

கோவை அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொணடனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன்  கூறுகையில், திமுக ஆட்சி அதிகபட்சம் 10 அமாவாசையில் பஞ்சராகிவிடும் என தெரிவித்தார்.

பல பொய்களை கூறி ஆட்சியை பிடித்தது திமுக என கூறிய அவர், சொன்னதை செய்யாத திமுகவை கண்டித்து நாளை மறுதினம் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்றார். மேலும் பொறுமையாக ஆறு மாத காலம் இருந்தால் நாங்கள் எல்லாம் பிஸ்கோத்து பார்டிகளா? சிலிர்த்து எழுந்தால் அதிமுக எதிரிகள் தாங்கமாட்டார்கள். அதிமுக எதற்கும் அஞ்சாது என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அடுத்த  10 அமாவாசைகளுக்குள் எதிரிகளை வீழ்த்தி , அதிமுக மீண்டும் அரியணை ஏறும் என ஆருடம் சொன்ன அவர்,  எந்த சோதனை  எஸ்.பி.வேலுமணிக்கு வந்தாலும் அதை தவிடுபொடியாக்குவோம் எனவும்  கூறினார்.