அதிமுக ஒற்றை தலைமை விவகாரம்.. அதிமுக ஒருங்கிணைப்பாளர்களுடன் செங்கோட்டையன் தனித்தனியே ஆலோசனை

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களுடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம்.. அதிமுக ஒருங்கிணைப்பாளர்களுடன் செங்கோட்டையன் தனித்தனியே ஆலோசனை

அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பான விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், காலை முதலே ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ். ஆகியோர் நிர்வாகிகளுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் தீர்மானக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், வெளியே இரு தரப்பு ஆதரவாளர்களும் வார்த்தைப்போரில் இறங்கினர். இந்த நிலையில், ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் இருக்கும் இல்லத்தில், சுமார் ஒரு மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசிய செங்கோட்டையன், மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு விரைந்தார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் இ.பி.எஸ், மற்றும் ஓ.பி.எஸ். தனித்தனியே ஆலோசித்து வருகின்றனர்.